/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நலவாரியத்தில் பதிவு செய்ய உதவி மையம்
/
நலவாரியத்தில் பதிவு செய்ய உதவி மையம்
ADDED : மார் 29, 2025 05:09 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், வீட்டுப்பணி தொழில்புரியும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக செய்திக்குறிப்பு :
வீட்டுப்பணி தொழில் புரியும் பணியாளர்களை புதிய உறுப்பினராக சேர்க்க உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆதார், ரேஷன்கார்டு, வங்கி புத்தகம், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன், எண்.23/ஏ, தாய் இல்லம், அண்ணாநகர் மெயன்ரோடு, கள்ளக்குறிச்சி 606 202 எனும் முகவரியில், சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் அரசு நலத்திட்ட நிதியுதவி கிடைக்கும்.