sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மக்களை அச்சுறுத்தும் குதிரைகள் விவசாயிகள் பாதிப்பு

/

மக்களை அச்சுறுத்தும் குதிரைகள் விவசாயிகள் பாதிப்பு

மக்களை அச்சுறுத்தும் குதிரைகள் விவசாயிகள் பாதிப்பு

மக்களை அச்சுறுத்தும் குதிரைகள் விவசாயிகள் பாதிப்பு


ADDED : ஆக 11, 2025 06:48 AM

Google News

ADDED : ஆக 11, 2025 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் சந்தப்பேட்டை பகுதியில் கூட்டம் கூட்டமாக திரியும் குதிரைகளால், பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருக்கோவிலுார் நகராட்சி புறநகர் பகுதியான சந்தப்பேட்டையில், சமீப காலமாக குதிரைகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. கடந்த சில நாட்களாக 20க்கும் மேற்பட்ட குதிரைகள் சந்தப்பேட்டை நகர வீதிகளில் வலம் வருகிறது. பகல் நேரத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தும் குதிரைகள், சாலையில் செல்வோரை அச்சுறுத்துகிறது. சில நேரம் சாலையோர கடைகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. இரவு நேரத்தில் அரும்பாக்கம் உள்ளிட்ட விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது.

திருக்கோவிலுார் நகர பகுதிக்குள் கூட்டம் கூட்டமாக வலம் வரும் பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகள், விவசாயிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குதிரைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம், வனத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us