/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீடு புகுந்து பணம், நகை கொள்ளை
/
வீடு புகுந்து பணம், நகை கொள்ளை
ADDED : டிச 09, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்; தியாகதுருகம் அருகே வீடு புகுந்து வெள்ளி பொருட்கள் மற்றும் 5,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த விளக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சையது ஜாபர் மனைவி ஷாகின், 45; சையது ஜாபர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 7:30 மணிக்கு ஷாகின் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். மதியம் 2:30 மணிக்கு சென்று பார்த்தபோது வீடு திறந்து கிடந்தது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு 80 கிராம் வெள்ளி, 5,000 ரூபாய் ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.