/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
/
வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
ADDED : ஏப் 21, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் லுார்து ராஜ், 57; இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு குடும்பத்துடன் தேவாலயத்துக்கு சென்றனர். அதிகாலை காலை 2:30 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ஆறரை சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

