/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
/
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
ADDED : டிச 06, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நுாருல்லா மகன் ஜான் பாஷா, 30; இவர், கடந்த மாதம் 14ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சங்கராபுரம் அடுத்த வட சேமபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது. தகவலறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கொள்ளை போன நகை, பணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.