ADDED : டிச 18, 2024 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசில், மனைவி புகார் அளித்துள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன், 39; மனநிலை பாதிக்கப்பட்டவர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
இந்நிலையில், நத்தாமூர் காப்பு காட்டில் துாக்கு போட்டு இறந்தது தெரியவந்தது.
அவரது மனைவி அஞ்சலை, 33; அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.