ADDED : செப் 19, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தலை சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி ரஞ்சிதா, 30; கடந்த 16ம் தேதி தொட்டியம் கிராமத்திற்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு சென்ற ரஞ்சிதா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் ரஞ்சிதாவை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது கணவன் சுப்ரமணி போலீசில் புகார் அளித்தார்.
சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.