ADDED : நவ 14, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சியை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ராஜேஸ்வரி,35; இருவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன் திருமணமான நிலையில், 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 9ம் தேதி காலை வழக்கம்போல் கூலி வேலைக்கு புறப்பட்டு சென்ற கணவர் பழனிசாமி மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி ராஜேஸ்வரி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
பழனிசாமி புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.