ADDED : அக் 24, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளாார்.
கள்ளக்குறிச்சி, அடுத்த பெருவங்கூரைச் சேர்ந்தவர் ராமசாமி, 45; இவர், கடந்த 19ம் தேதி அதே ஊரில் உள்ள இ-சேவை மையத்திற்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவரது குடும்பத்தினர் சந்தேகமடைந்து பல்வேறு இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை.
அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

