/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை! வணிக நிறுவனங்கள்,பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
/
போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை! வணிக நிறுவனங்கள்,பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை! வணிக நிறுவனங்கள்,பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை! வணிக நிறுவனங்கள்,பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : ஜூலை 09, 2024 11:33 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சாலையோர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகரில் உள்ளூர் வணிக நிறுவனங்களுக்கு போட்டியாக நகைகள், துணிக்கடைகள், பல்பொருள் அங்காடி உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான நிறுவனங்களும் தங்களின் கிளைகளை கள்ளக்குறிச்சியில் துவங்கியுள்ளனர். மேலும் பல நிறுவனங்கள் வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதனால் கள்ளக்குறிச்சியில் வணிக நிறுவனங்களின் வளர்ச்சி படுவேகமாகி வருகிறது. ஆனால் அனைத்து வணிக நிறுவனங்களும் மாவட்ட தலைநகரமான கள்ளக்குறிச்சி நகரில் கச்சிராயபாளையம், துருகம், சேலம், சங்கராபுரம் ஆகிய 4 முக்கிய சாலைகளை மையப்படுத்தியே அமைத்து வருகின்றனர்.
இதனால் நகரின் அனைத்து சாலையோரங்களையும் வணிக நிறுவனங்கள் தங்களின் ஆக்கிரமிப்புகளோடு, அங்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களையும் வரிசையாக நிறுத்தி அடைத்துக்கொள்வதால் சாலைகள் குறுகி போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டியது. அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சாலையோர ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் நிர்வாகிகளோடு, நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் அனைத்து வணிக நிறுவனங்கள் தங்களின் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு 'பார்க்கிங்' வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி காவல் துறை சார்பில் கடைகளின் முன்பாக 5 மீட்டர் துாரத்தில் கயிறு கட்டி வாகனங்களை நிறுத்திக்கொள்வதற்காக இடம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். ஆனால் வாகனங்களை நிறுத்துபவர்கள் கயிறுகோட்டை தாண்டி சாலைகளை அடைத்துக்கொண்டு வாகனங்களை நிறுத்திவைக்கின்றனர். இவ்வாறு அளவீடுகளை கடந்து 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் தொடர்ந்து காலை முதல் இரவு வரை தேவையின்றி சாலையோரங்களை அடைத்து வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்வதாக வணிக நிறுவனங்களின் நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர்.