/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆன்லைன் மோசடியில் பணம் இழக்கும் நபர்கள் அதிகரிப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை தேவை
/
ஆன்லைன் மோசடியில் பணம் இழக்கும் நபர்கள் அதிகரிப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை தேவை
ஆன்லைன் மோசடியில் பணம் இழக்கும் நபர்கள் அதிகரிப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை தேவை
ஆன்லைன் மோசடியில் பணம் இழக்கும் நபர்கள் அதிகரிப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : செப் 09, 2024 06:10 AM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆன்லைன் செயலி மற்றும் மோசடி கும்பலில் பொதுமக்கள் பலர் சிக்கி பணத்தை இழக்கின்றனர். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாளுக்கு நாள் வளரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆன்ட்ராய்டு போன் இல்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆன்ட்ராய்டு பயனாளிகள் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூ-டியூட் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு செயலிகளை பயன்படுத்துகின்றனர்.
இதில், கூகுள் நிறுவனம் அங்கீகரிக்காத, ப்ளே ஸ்டோரில் இல்லாத பாதுகாப்பற்ற செயலிகளை, 'ப்ரவுசர்' மூலமாக இளைஞர்கள் பதிவிறக்கம் செய்கின்றனர். இந்த செயலிகளை பயன்படுத்துவதற்கு முன் விளம்பரங்கள் பார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதில், ஆன்லைன் மூலமாக எளிமையாக கடன் பெறும் செயலிகளும் மற்றும் ரம்மி விளையாட்டும் அதிகளவு விளம்பரமாகிறது. எவ்வித பரிந்துரையுமின்றி கடன் தொகை கிடைப்பதாலும், விளையாட்டின் மூலம் அதிகளவு பணம் சம்பாதிக்கலாம் எனவும் சிலர் ஆசைப்பட்டு அதை பதிவிறக்கம் செய்கின்றனர்.
செயலிகளை பதிவிறக்கம் செய்யும் முன் அதில் கூறப்படும் விதிமுறைகளை முழுமையாக படிக்காமல், அனைத்திற்கும் 'அக்சப்ட்' அளிப்பதுடன், வங்கி கணக்கு, ஆதார் எண் மற்றும் பான்கார்டு உள்ளிட்ட விபரங்களையும் பதிவிடுகின்றனர். இதன் மூலம் பொதுமக்களின் போனில் உள்ள புகைப்படம், வீடியோ, தொடர்பு எண், சமூக வலைதள விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஆன்லைன் மோசடி கும்பல் சேகரிக்கிறது. சிறிது நேரம் கழித்து அவர்களது வங்கி கணக்கில், ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணமும் கிடைத்து விடுகிறது.
தொடர்ந்து, சில நாட்களுக்கு பிறகு கடன் வழங்கிய செயலி நிறுவனத்தில் இருந்து மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு, வாங்கிய கடன் தொகையை விட பல மடக்கு தொகையை திருப்பி செலுத்துமாறு தெரிவிக்கின்றனர்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், அவர்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் வருகிறது. தொடர்ந்து மீண்டும் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு, மார்பிங் புகைப்படங்களை உங்களது நண்பர்கள், சமூக வலைதளங்களில் பகிருவோம், பணத்தை தாருங்கள் என மிரட்டுகின்றனர்.
இந்த மிரட்டலுக்கு அஞ்சுபவர்கள் வேறு வழியின்றி மர்ம நபர்கள் கேட்கும் பணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்துகின்றனர். மார்பிங் புகைப்படங்கள் இருப்பதால், இது குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்க முடியாமலும், வெளியில் தெரிவிக்க முடியாமலும் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுதவிர, ரம்மி உட்பட ஆன்லைன் விளையாட்டுகளில் அதிகளவு பணத்தை கட்டி சிலர் ஏமாற்றமடைகின்றனர்.கடன் அளிக்கும் செயலி மற்றும் ஆன்லைன் மோசடி கும்பல்களிடமிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது தொடர்பாக, பொதுமக்கள், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.