sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : அக் 23, 2024 06:34 AM

Google News

ADDED : அக் 23, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : சாத்தனுார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரம் சாத்தனுார் அணை வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து அணை யின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,920 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 119 அடி உயரமுள்ள அணையில், 115.65 அடி, அதாவது 7,321 மில்லியன் கன அளவு கொள்ளளவு கொண்ட அணையில், தற்பொழுது 4,634 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் ஏதும் இல்லை. இதன் காரணமாக அணை 63.35 சதவீதம் நிரம்பியுள்ளது.

வரும் நாட்களில் அணைக் கான நீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் அணை விரைவில் நிரம்பும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us