/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இந்திய கம்யூ., நகர குழு மாநாடு
/
இந்திய கம்யூ., நகர குழு மாநாடு
ADDED : ஜூன் 04, 2025 09:18 PM
திருக்கோவிலுார் ; திருக்கோவிலுாரில் இந்திய கம்யூ., நகர குழு மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலுாரில் இந்திய கம்யூ., கட்சியின், நகர குழுவின் 8வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
நகர செயலாளர் கிப்ஸ் தலைமை தாங்கினார். துணை செயலாளர் அருண்குமார் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து பேசினார். முன்னாள் நகர செயலாளர் பஷீர் அகமது துவக்க உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் ராமசாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், வளர்மதி, ஒன்றிய செயலாளர்கள் ரவி, அஞ்சாமணி வாழ்த்தி பேசினர்.
இதில், தெப்பக்குளத்திற்கு ஏரியிலிருந்து தண்ணீர் வரும் பாதாள கால்வாயை சீரமைக்க வேண்டும். உழவர் சந்தை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அருண் நன்றி கூறினார்.