/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கம்பு சாகுபடிக்கு மானிய இடுபொருட்கள் வேளாண் இணை இயக்குநர் தகவல்
/
கம்பு சாகுபடிக்கு மானிய இடுபொருட்கள் வேளாண் இணை இயக்குநர் தகவல்
கம்பு சாகுபடிக்கு மானிய இடுபொருட்கள் வேளாண் இணை இயக்குநர் தகவல்
கம்பு சாகுபடிக்கு மானிய இடுபொருட்கள் வேளாண் இணை இயக்குநர் தகவல்
ADDED : ஜூலை 14, 2025 03:42 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் கம்பு சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நெல், உளுந்து, மக்காச்சோளத்திற்கு அடுத்தபடியாக அதிக ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானியமாக கம்பு உள்ளது.
நீர்வளம், மண்வளம் குறைந்த இடங்களிலும், மானாவாரி நிலத்திலும் செழித்து வளரக்கூடியது. எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மை கொண்ட கம்பு பயிர் சாகுபடிக்கு தேவையான விதை, விதை நேர்த்திக்கு தேவையான உரங்கள், சிறுதானிய நுண்ணுாட்ட கலவை ஆகிய இடு பொருட்கள் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின்கீழ் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் அனைத்தும், மாவட்டத்தின் அனைத்து வட்டார ஒருங்கிணந்த வேளாண் விரிவாக்க மையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தகவல் அறிய, வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

