/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சேதமடைந்த மக்காச்சோள வயலில் ஆய்வு
/
சேதமடைந்த மக்காச்சோள வயலில் ஆய்வு
ADDED : ஏப் 18, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மழையால் சேதமடைந்த மக்காச்சோள வயலை, வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் பகுதியில் அரசம்பட்டு, பாலப்பட்டு, பாவளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த, 11 ம் தேதி இரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில், விவசாயிகள் சாகுபடி செய்திருந்த 500 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில், சங்கராபுரம் வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் பாதிக்கப்பட்ட மக்காச்சோள வயலை பார்வையிட்டார். ஆய்வின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அப்போது வேளாண்மை அலுவலர்கள் பழனிவேல், அப்பாஸ் உடன் இருந்தனர்.