sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 இயற்கை பேரிடரை அறிய 'டிஎன்-அலர்ட்' செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்

/

 இயற்கை பேரிடரை அறிய 'டிஎன்-அலர்ட்' செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்

 இயற்கை பேரிடரை அறிய 'டிஎன்-அலர்ட்' செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்

 இயற்கை பேரிடரை அறிய 'டிஎன்-அலர்ட்' செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்


ADDED : நவ 28, 2025 05:30 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிய உதவும் 'டிஎன்-அலர்ட்' செயலியை பதிவிறக்கம் செய்திட கலெக்டர் வலியுறுத்தியுள்ளர்.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் தமிழ்நாடு அரசின் 'டிஎன்-அலர்ட்' செயலியை பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.

இயற்கை பேரிடரை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை செய்திகளை பெறவும் தமிழக அரசு டிஎன்அலர்ட் செயலியை உருவாக்கியுள்ளது.

இதனை மொபைலில் பிளே ஸ்டோரில் இருந்து அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் வானிலை தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் துல்லியமாக வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக தற்போதைய வானிலை தகவல், வானிலை முன்னறிவிப்பு, மழை, இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை, மின்னல் எச்சரிக்கை, ஒவ்வொரு மணி நேரத்திற்குமான வானிலை அறிக்கை, அடுத்த 3 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு, பெறப்பட்ட மழையின் அளவு, அணைகளின் நீர்மட்டம், வெள்ளம் பாதிக்கப்படக்கூடும் என கருதப்படுகிற வசிப்பிடப் பகுதிகள் குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பெற முடியும். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் தமிழ்நாடு அரசின் மிகவும் பயனுள்ள 'டிஎன்-அலர்ட்' செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us