sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தீவிரம்

/

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தீவிரம்

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தீவிரம்

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தீவிரம்


ADDED : செப் 30, 2024 06:48 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில், சில தினங்களாக, மழை பெய்து பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து, டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், நகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா மற்றும் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் அறிவுறுத்தலின்படி, நகராட்சி பகுதிகளில், தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில், டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வீடுகள்தோறும் நலக்கல்வி மூலமாக கொசுப்புழு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நகராட்சி முழுதும் சுகாதார ஆய்வாளர் விக்னேஷ்வரன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஒவ்வொரு பகுதியாக வீடுகள், கடைகள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி, பூந்தொட்டிகள், டயர், தண்ணீர் தொட்டி, தேங்காய் ஓடுகளில் தேங்கும் தண்ணீரை அகற்றி டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us