sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தீவிரமடையும் பருவமழை சாத்தனுார் அணைக்கு நீர் வரத்து துவக்கம்

/

தீவிரமடையும் பருவமழை சாத்தனுார் அணைக்கு நீர் வரத்து துவக்கம்

தீவிரமடையும் பருவமழை சாத்தனுார் அணைக்கு நீர் வரத்து துவக்கம்

தீவிரமடையும் பருவமழை சாத்தனுார் அணைக்கு நீர் வரத்து துவக்கம்


ADDED : அக் 16, 2024 08:22 AM

Google News

ADDED : அக் 16, 2024 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : வடகிழக்கு பருவமழை துவங்கியிருக்கும் நிலையில், சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக இருப்பது சாத்தனுார் அணை. இது நிரம்பினால் தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுக்கும் நீரால், ஆயிரக்கணக்கான ஏரிகள் நிரம்பி, விவசாயம் செழிக்கும். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை துவங்கி இருக்கும் சூழலில், வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,260 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 119 அடியில், 97 அடி, அதாவது 7,321 மில்லியன் கனடியில், 3,820 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணை கிட்டத்தட்ட 46.14 சதவீதம் நிரம்பி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும்என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us