sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பொதுத்தேர்வில் தொடர்ந்து சாதனை ஜே.எஸ்., பள்ளி தாளாளர் பெருமிதம்

/

பொதுத்தேர்வில் தொடர்ந்து சாதனை ஜே.எஸ்., பள்ளி தாளாளர் பெருமிதம்

பொதுத்தேர்வில் தொடர்ந்து சாதனை ஜே.எஸ்., பள்ளி தாளாளர் பெருமிதம்

பொதுத்தேர்வில் தொடர்ந்து சாதனை ஜே.எஸ்., பள்ளி தாளாளர் பெருமிதம்


ADDED : அக் 11, 2024 06:53 AM

Google News

ADDED : அக் 11, 2024 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சாதனை படைத்து வருவதாக பள்ளி நிறுவனர் டாக்டர் செந்தில்குமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர், கூறியதாவது:

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் புறவழிச்சாலையில் உள்ள ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், ஸ்மார்ட் பலகைகள் மூலமும், அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டும் பாடம் கற்பிக்கப்படுகிறது. மொழிப்பாடங்கள், அறிவியல், கணினிஅறிவியல் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றிற்கு தனி, தனி ஆய்வகங்கள் உள்ளது.

கடந்த 2 கல்வியாண்டில் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை படைத்துள்ளது. மாணவர்களின் கையெழுத்தை தெளிவாக, அழகாக இருப்பதற்காக கையெழுத்து பயிற்சியும், 6ம் வகுப்பில் இருந்து ஜே.இ.இ., நீட் மற்றும் ஜே.ஐ.ஐ.டி., உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

கற்றலில் மட்டுமின்றி மாணவ, மாணவிகளின் தனித்திறனை ஊக்குவிக்க பரதநாட்டியம், நடனம், இசை வகுப்புகள், விளையாட்டு திறனை மேம்படுத்த வில்வித்தை, சிலம்பம், ஸ்கேட்டிங், கராத்தே வகுப்புகள் மனதை ஒருமுகப்படுத்த யோகா பயிற்சி, கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மாவட்ட, மாநில அளவில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில், ஜே.எஸ்., பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று தொடர் வெற்றி பெற்றுள்ளனர்.

மாணவர்களுக்கு மட்டுமின்றி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஆங்கில புலமையை மேம்படுத்த ஆண்டுதோறும் 'பிரிட்டிஷ் கவுன்சில் ட்ரைனிங் பார் இங்கிலீஷ் கம்யூனிகேஷன்' பயிற்சி வகுப்பிலும், பண்முகத்திறனுக்காக சி.பி.எஸ்.இ., மூலம் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளிலும் பங்கேற்கின்றனர்.

ஒரு வகுப்பறையில் 20 மாணவ, மாணவிகள் மட்டுமே அமர வைக்கப்படுகின்றனர். காற்றோட்டமான இயற்கை சூழல், ஆரோக்கியமான உணவு, சிறந்த பாதுகாப்பு, குளிர்சாதன பேருந்து வசதி, பெற்றோர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் பள்ளியாக விளங்குகிறது. இவ்வாறு அவர், கூறினார்.






      Dinamalar
      Follow us