sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., - நீட் தேர்வுகளில் தொடர் சாதனை; நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் பெருமிதம்  

/

ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., - நீட் தேர்வுகளில் தொடர் சாதனை; நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் பெருமிதம்  

ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., - நீட் தேர்வுகளில் தொடர் சாதனை; நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் பெருமிதம்  

ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., - நீட் தேர்வுகளில் தொடர் சாதனை; நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் பெருமிதம்  


ADDED : ஏப் 30, 2025 07:33 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள், ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வுகளில் மாவட்ட அளவில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

இது குறித்து ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது;

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவ, மாணவியர் நீட் மற்றும் தேசிய அளவிலான பொறியியல் கல்லுாரியில் சேருவதற்கான ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிறந்து முறையில் அளித்து வருகிறோம்.

தேர்வுகளில் இங்கு பயிலும் மாணவ, மாணவியர் மாநில, மாவட்ட அளவில் ஆண்டுதோறும் சாதனை படைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது.

அதில், மாணவர் சித்தார்த் 98.68 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவர்கள் எஸ்.அறிவொளி 96.76 சதவீதம், தினேஷ் 94.59, ராதாகிருஷ்ணன் 93.95, மாணவி லினிஷா 93.18, மாணவர்கள் சந்தோஷ் 92.78, எஸ்.வி., அறிவொளி 92.42, ரோகித்குமார் 92.38 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில், 18 பேர் 90 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜே.இ.இ., மெயின் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற, 12 பேர் ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் பிரித்விராஜ் சென்னையிலும், மாணவர் ஹேமநாத் ரூபன் ஹதராபாத்திலும் ஐ.ஐ.டி.,யில் சேர்க்கை பெற்றுள்ளனர். அதேபோல், மாணவர் அரவிந்த்குமார் திருச்சியிலும், மாணவர் பாலாஜி கோல்கட்டாவிலும், என்.ஐ.டி.,யில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

அதேபோல் ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி வகுப்பு மூலம் இதுவரை அரசு இட ஒதுக்கீட்டின் கீழ், 627 பேர் மருத்துவ சேர்க்கை பெற்றுள்ளனர். ஏ.கே.டி., பள்ளியில் பல்வேறு வகையான சிறப்பு அம்சங்களுடன் நேரடி நிர்வாகம் மூலம் தென்னியந்திய ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

நீட் பயிற்சி வகுப்புக்கான சேர்க்கைக்கு, 63691 46590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விடுதி வசதியும் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us