sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சாதனை

/

லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சாதனை

லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சாதனை

லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சாதனை


ADDED : அக் 02, 2024 11:32 PM

Google News

ADDED : அக் 02, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த மருத்துவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.

கல்லுாரி டீன் நேரு தலைமை தாங்கினார். மருத்துவக் கண்காணிப்பாளர் பழமலை, நிலைய மருத்துவ அலுவலர் பொற்செல்வி, துணை முதல்வர் ஷமீம், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அறுவை சிகிச்சை துறை பதிவாளர் தமிழ்ச்செல்வன், மயக்கவியல் துறை பேராசிரியர் ஹாஜாஷரீப் மற்றும் அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் துறை உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின் கல்லுாரி டீன் நேரு நிருபர்களிடம் கூறியதாவது; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் பித்தப்பை, ஒட்டு குடல், குடல்வால், குடல் இறக்கம் உள்ளிட்ட நோயாளிகள் 600 பேருக்கு லேப்ரோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது என்றார்.

முன்னதாக சர்வதேச முதியோர் தின விழாவையொட்டி, சென்னையில் சுகாதார துறை அமைச்சர் சுப்ரமணியன், தமிழகம் முழுவதும் 1000 பேருக்கு முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் சான்றிதழ் படிப்பினை துவக்கி வைத்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும் இப்பயிற்சிக்கு 10 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர்.






      Dinamalar
      Follow us