/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் நடப்பு ஆண்டிற்கு ரூ.14,051 கோடி கடன் வழங்க இலக்கு
/
கள்ளக்குறிச்சியில் நடப்பு ஆண்டிற்கு ரூ.14,051 கோடி கடன் வழங்க இலக்கு
கள்ளக்குறிச்சியில் நடப்பு ஆண்டிற்கு ரூ.14,051 கோடி கடன் வழங்க இலக்கு
கள்ளக்குறிச்சியில் நடப்பு ஆண்டிற்கு ரூ.14,051 கோடி கடன் வழங்க இலக்கு
ADDED : ஜூலை 30, 2025 11:32 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.14,051.55 கோடி கடன் உதவி வழங்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த காலாண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூ. 3,198.98 கோடியும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.360 கோடி, மற்ற கடன்கள் ரூ.154.52 கோடி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.185.28 கோடி என மொத்தம் 37,113.50 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நடப்பு ஆண்டிற்கு ரூ.14,051.55 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டது.கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் கூடுதலாக கடன் வழங்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழில் சார்ந்த நிறுவனங்கள், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களுக்கு கடன் வழங்கவும் வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.