sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு 97 பேர் கோர்ட்டில் ஆஜர்    விசாரணை வரும், மே 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு 

/

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு 97 பேர் கோர்ட்டில் ஆஜர்    விசாரணை வரும், மே 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு 

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு 97 பேர் கோர்ட்டில் ஆஜர்    விசாரணை வரும், மே 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு 

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு 97 பேர் கோர்ட்டில் ஆஜர்    விசாரணை வரும், மே 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு 


ADDED : ஏப் 25, 2025 01:55 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில், 2 பெண்கள் உட்பட 97 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜரான நிலையில், விசாரணை வரும், மே 7 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமாக இறந்தார். அதைத்தொடர்ந்து, ஜூலை 17ல் நடந்த போராட்டம், கலவரமாக மாறியது.

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு டி.எஸ்.பி., அம்மாதுரை உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்தனர்.

அதில், பள்ளி வளாகத்திற்குள் பொருட்களை சூறையாடி திருடியது, போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது, பசுமாடுகளை துன்புறுத்தியது, சின்னசேலத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரை கல்வீசி தாக்கியது என மொத்தம், 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக, 916 பேர் மீது வழக்கு பதிந்து, 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பள்ளி முன்பு கலவரத்தில் ஈடுபட்டு போலீஸ் வாகனத்தை தீ வைத்தது தொடர்பான வழக்கில், 121 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் ஒருவர் இறந்த போன நிலையில், மீதமுள்ள 120 பேருக்கு கோர்ட்டில் ஆஜராக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் மூலம் சம்மன் அனுப்பினர்.

இந்த வழக்கின் விசாரணை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில், நேற்று நடந்தது. நீதிபதி ரீனா முன்னிலையில், 2 பெண்கள் உட்பட மொத்தம்,97 பேர் ஆஜராகினர். இதில், 23 பேர் ஆஜராகவில்லை. இதையடுத்து வரும், மே 7ம் தேதி அனைவரும் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us