/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கராத்தே போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு
/
கராத்தே போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : பிப் 09, 2026 03:04 AM

கள்ளக்குறிச்சி: தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற அம்மையகரம் தாகூர் ஜீவன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் கடந்த 1ம் தேதி தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் சின்னசேலம் அடுத்த அம்மையகரம் தாகூர் ஜீவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 49 பேர் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவர் தங்கவேல், பொருளாளர் விஜயகுமார், துணை தலைவர் ராஜி, செயலாளர் பிரபாகரன், இணை செயலாளர் அருண்குமார் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
பள்ளி முதல்வர் மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

