sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த வழக்கில் கர்நாடகா நபர் கைது

/

நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த வழக்கில் கர்நாடகா நபர் கைது

நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த வழக்கில் கர்நாடகா நபர் கைது

நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த வழக்கில் கர்நாடகா நபர் கைது


ADDED : நவ 24, 2024 07:06 AM

Google News

ADDED : நவ 24, 2024 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு உணவில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து, 1.82 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், பவித்ரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 32; கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்த ரகுபதிரெட்டி என்பவர், கடந்த 18ம் தேதி இரவு உணவில் மயக்க மாத்திரை கலந்து, மேலாளர் கார்த்திக் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கொடுத்துள்ளார்.

அதில், அனைவரும் துாங்கிய நிலையில், அலுவலகத்தில் இருந்த 1.82 லட்சம் ரூபாயை ரகுபதிரெட்டி கொள்ளையடித்துச் சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத் சதுர்வேதி உத்தரவின்பேரில், டி.எஸ்.பி., தேவராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வினய்ஆனந்த், காவலர்கள் சிவராமன், பாஸ்கர் மற்றும் அஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில், மொபைல் போன் டவர் சிக்னலை வைத்து தலைமறைவாக இருந்த கர்நாடகா மாநிலம், மைசூர் உதயகிரி பகுதியை சேர்ந்த ரகுபதிரெட்டி, 47; என்பவரை நேற்று கைது செய்து, 1.60 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us