/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
/
ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
ADDED : ஜன 07, 2026 06:26 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு, 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் கலெக்டர் லேப்டாப் வழங்கினார்.
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தின் கீழ் கலெக்டர் பிரசாந்த், ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் பயிலும் 231 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கி, நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பேசினார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பயிலும் 394 மாணவர்கள், திருக்கோவிலுார் அரசு கல்லுாரி 218, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி 140, சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 80, உளுந்துார்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையம் 330, சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 138, சங்கராபுரம் பாலிடெக்னிக் கல்லுாரி 177 என மொத்தமாக 1,708 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., முருகன், ஒன் றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், ரிஷிவந்தியம் அரசு கல்லுாரி முதல்வர் (பொ) குப்புசாமி, அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

