sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போதை நண்பர்கள் மோதல் தந்தை, மகன் மீது வழக்கு

/

போதை நண்பர்கள் மோதல் தந்தை, மகன் மீது வழக்கு

போதை நண்பர்கள் மோதல் தந்தை, மகன் மீது வழக்கு

போதை நண்பர்கள் மோதல் தந்தை, மகன் மீது வழக்கு


ADDED : செப் 25, 2024 06:46 AM

Google News

ADDED : செப் 25, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தந்தை, மகன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ், 36. இவரது நண்பர் பிரதாப், 34; இருவரும் நேற்று முன்தினம் இரவு 8:00 மணி அளவில் வழக்கம் போல் மாதேஷ் வீட்டில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அங்கு வந்த பிரதாபின் மனைவி சரளா, மாதேஷை பார்த்து ஏன் என் கணவரை கெடுக்கிறாய் என கேட்டார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, மாதேஷுக்கும், பிரதாப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பிரதாப்பின் தந்தை வேலுவும் சேர்ந்து, மாதேஷை சரமாரியாக தாக்கினர். காயமடைந்த மாதேஷ் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், பிரதாப் அவரது தந்தை வேலு ஆகியோர் மீது மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us