/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சட்ட உதவி பணியிடங்கள்: வரும் 22ல் எழுத்து தேர்வு
/
சட்ட உதவி பணியிடங்கள்: வரும் 22ல் எழுத்து தேர்வு
ADDED : மார் 15, 2025 08:30 PM
கள்ளக்குறிச்சி; விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் அலுவலக உதவியாளர், எழுத்தாளர் மற்றும் பியூன் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, நேர்காணல் வரும் 22 ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்த விரிவான தகவல்களை, https://viluppuram.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த தகவலை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.