ADDED : மே 03, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
அ.பாண்டலம் ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தின் ஒரு அங்கமாக சங்கராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் வழக்கறிஞர் திருநாவுக்கரசு சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள், சட்ட பணிகள் குழு தன்னார்வலர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.