ADDED : டிச 31, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம், : கா.அலம்பலம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று கா.அலம்பலம் கிராமத்தில் ரெய்டு சென்றனர். அப்போது தனது வீட்டின் பின்புறம் மறைத்து வைத்து மதுபாட்டில் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த பாவாடை மகன் அழகுப்பிள்ளை,59; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.