/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை நீடிப்பு
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை நீடிப்பு
ADDED : ஏப் 23, 2025 05:52 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் மின் உற்பத்தி குறைந்ததால் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், பூத்தமேடு மின்துறை பவர் ஸ்டேஷன் மூலம் 230 கிலோ வாட்ஸ் மின்சாரம் உற்பத்தியாக வந்து சேருகிறது. அங்கிருந்து விழுப்புரம் துணை மின் நிலையத்திற்கு 110 கிலோ வாட்ஸ் பிரித்து அனுப்புகின்றனர். இதன் மூலம் கஞ்சனுார், மதுரப்பாக்கம் உள்ளிட்ட மின் நிலையத்திற்கு 22 கிலோ வாட்சாக பிரித்து அனுப்பப்படுகிறது.
அதே போல், செஞ்சி, திண்டிவனம் பகுதிகளில் 11 கிலோ வாட்ஸ் மட்டுமே மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கோடை காலம் துவங்கியதையொட்டி, கடந்த 15 நாட்களாக மாவட்டத்தில் குறைவான கிலோ வாட் மின்சாரம் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது.
இதனால் ஏற்படும் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்த பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் மின்துறை அதிகாரிகள் திணறுகின்றனர். மறுபுறம் வீடுகளில் உள்ள 'ஏசி', 'டிவி', பேன் உள்ளிட்டவை பழுதாவதால் மின்துறை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் புகார் கூறியும், மின்உற்பத்தி குறைபாடு காரணமாக அதிகாரிகள் தற்போது வரும் மின் சப்ளையை பகிர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

