/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
என்றென்றும் மக்கள் சேவையில் மதி அகாடமி
/
என்றென்றும் மக்கள் சேவையில் மதி அகாடமி
ADDED : அக் 10, 2024 05:57 AM

திருக்கோவிலூரில் கல்வி, விளையாட்டு, சேவை திட்டங்கள் என பொதுப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டு மக்கள் நலம் விரும்பும் செயல்களை மதி அகாடமி செய்துவருகிறது.
இது குறித்து மதி அகாடமியின் தலைவர் மதிவாணன் கூறியதாவது.
திருக்கோவிலூர் கோவில் நகர அரிமா சங்கத்தில் தலைவரில் துவங்கி பல்வேறு பதவிகளுடன் சங்க செயல்பாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஆர்வமுடன் செயல்பட்டதன் காரணமாக, பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது.
சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட தேசிய விருதுகள் 12, அரிமா விருதுகள் 90, பன்னாட்டு விருதுகள் 15, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விருதுகள் 42 என மொத்தம் 176 க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளது.
திருக்கோவிலூர் அரிமா சங்கர் தலைவராக இரண்டு முறை செயலாற்றி டாப் 10 இடத்தை பெற்றுள்ளேன். இவைகள் என்னை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதால், அரிமா சங்க சேவையை மட்டுமல்லாது மு.பா.மெமோரியல் டிரஸ்ட், மதி அகாடமி பெயரில் பல ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்யும் ஒரு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது.
வித்யா மந்திர் எஜுகேஷன் டிரஸ்ட் செயலாளர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர் அரிமா சங்க வந்தவாசி இணை உறுப்பினர் திருக்குறள் கழக அறக்கட்டளை உறுப்பினர் திருக்கோவிலூர் நகர பொது நூலக புரவலர் , விழுப்புரம் பாவேந்தர் பேரவை உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளுடன் சேவையை மேற்கொண்டு வருகிறேன்.
தனக்கு உறுதுணையாக தனது மகன் பொறியாளர் மதிமாறன் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மதி அகாடமியின் தலைவர் மதிவாணன் கூறினார்.

