/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிநீர் கேட் வால்வு தொட்டியில் ஆண் உடல்: போலீஸ் விசாரணை
/
குடிநீர் கேட் வால்வு தொட்டியில் ஆண் உடல்: போலீஸ் விசாரணை
குடிநீர் கேட் வால்வு தொட்டியில் ஆண் உடல்: போலீஸ் விசாரணை
குடிநீர் கேட் வால்வு தொட்டியில் ஆண் உடல்: போலீஸ் விசாரணை
ADDED : அக் 25, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டையில் குடிநீர் கேட் வால்வு தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் வீராசாமி, 62; டைலர். நேற்று காலை பஸ் நிலையம் அருகே, கெங்கையம்மன் கோவில் எதிரில் இருக்கும் தெருக்களுக்கு குடிநீர் வழங்கும் கேட் வால்வு தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி எப்படி இறந்தார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.