ADDED : ஜன 12, 2026 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே முதியவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி, 73; இவர் நேற்று முன்தினம் காலை பால் சொசைட்டிக்கு பால் எடுத்து சென்றார். அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, 40; முத்துசாமியிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த முத்துசாமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து பிரபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

