sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது

/

பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது

பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது

பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது


ADDED : நவ 07, 2025 12:33 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் இளம் பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கல்வராயன் மலையில் உள்ள வாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் திவ்யா, 21; இவர் கடந்த 1ம் தேதி காலை 10 மணி அளவில் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். இரவு 7 மணி வரை திவ்யா வீடு திரும்பவில்லை. திவ்யாவின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து திவ்யாவின் பெற்றோர் கரியாலுார் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில் திவ்யாவை கல்வராயன்மலை, சேம்பூர் கிராமத்தைச் சேர்ந்த குள்ளன் மகன் செல்வம், 29; என்பவர் வாரம் கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தன் மகன் அழகுராஜ் மற்றும் அவரது மகன் பார்த்திபன் ஆகியோரின் உதவியுடன் திவ்யாவை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கட்டாய திருமணம் செய்தவர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிந்து, கரியாலுார் போலீசார் செல்வம் என்பவரை நேற்று கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us