/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது
/
பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது
ADDED : நவ 07, 2025 12:33 AM
கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் இளம் பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கல்வராயன் மலையில் உள்ள வாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் திவ்யா, 21; இவர் கடந்த 1ம் தேதி காலை 10 மணி அளவில் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். இரவு 7 மணி வரை திவ்யா வீடு திரும்பவில்லை. திவ்யாவின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து திவ்யாவின் பெற்றோர் கரியாலுார் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில் திவ்யாவை கல்வராயன்மலை, சேம்பூர் கிராமத்தைச் சேர்ந்த குள்ளன் மகன் செல்வம், 29; என்பவர் வாரம் கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தன் மகன் அழகுராஜ் மற்றும் அவரது மகன் பார்த்திபன் ஆகியோரின் உதவியுடன் திவ்யாவை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கட்டாய திருமணம் செய்தவர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிந்து, கரியாலுார் போலீசார் செல்வம் என்பவரை நேற்று கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

