ADDED : பிப் 02, 2026 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, ஜீவா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செங்கயன், 34; பிடித்து விசாரித்தபோது, 20 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து செங்கயனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

