sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கண்டக்டரிடம் திருட முயன்ற நபர் கைது

/

கண்டக்டரிடம் திருட முயன்ற நபர் கைது

கண்டக்டரிடம் திருட முயன்ற நபர் கைது

கண்டக்டரிடம் திருட முயன்ற நபர் கைது


ADDED : அக் 27, 2024 04:49 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில், பஸ் கண்டக்டரிடம் திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, கொணவட்டம் பணிமனைக்குட்பட்ட அரசு பஸ் நேற்று காலை திருச்சியில் இருந்து வேலுார் சென்று கொண்டிருந்தது. 7:30 மணியளவில் உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் வந்தது. அப்போது பஸ் கண்டக்டரான ராஜீவ்காந்தி, 40; வைத்திருந்த கைப்பையில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை ஒருவர் திருட முயன்றார்.

உடன் சுதாரித்த ராஜிவ்காந்தி, அந்த நபரை பிடித்து உளுந்துர்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அடுத்த தொடையூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், 42; இவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன் உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் கண்டக்டரிடம் 12 ஆயிரம் ரூபாய் திருடி சென்றுள்ளார்.

மேலும், இன்று விக்கிரவாண்டியில் நடக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்போரிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்காக திருச்சியில் இருந்து விழுப்புரத்திற்கு சென்றபோது, கண்டக்டரிடம் பணத்தை திருடிய போது சிக்கியதும் தெரியவந்தது.

இவர் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 25 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us