/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எறும்பு மருந்து குடித்தவர் பலி
/
எறும்பு மருந்து குடித்தவர் பலி
ADDED : டிச 23, 2024 11:10 PM
திருக்கோவிலூர்; எறும்பு மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மணலூர்பேட்டை, மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி மகன் கோவிந்தன்,46; குடிக்கு அடிமையான இவர், கடந்த 21ம் தேதி இரவு குடித்துவிட்டு வீட்டில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சண்டையிட்டார்.
அதில் கோபமடைந்த மனைவி பாக்கியம், 44; மற்றும் பிள்ளைகள் வெளியில் சென்று விட்டனர்.
அதில் விரக்தியடைந்த கோவிந்தன் எறும்பு மருந்தை குடித்து, மயங்கி கிடந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.