/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூச்சி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி பலி
/
பூச்சி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : ஜன 26, 2025 05:53 AM
கள்ளக்குறிச்சி : வயிற்று வலி தாங்காமல் பூச்சி மருந்து குடித்தவர் சிகிச்சை பலின்றி இறந்தார்.
வரஞ்சரம் அடுத்த நின்னையூரை சேர்ந்தவர் ராமன் மனைவி சரோஜா,51; இவருக்கு சிறுநீரக பிரச்னையால் டயாலிசிஸ் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக டயாலிசிஸ் செய்யப்படாததால் சரோஜாவிற்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி வயிற்று வலி தாங்கமுடியாமல் சரோஜா, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

