/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாத்திரை சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி
/
மாத்திரை சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : ஜூன் 21, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மதுபோதையில் மாத்திரை சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கள்ளக்குறிச்சி, நேப்பால் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 46; குடிப்பழக்கம் உடையவர். இவர், கடந்த 9ம் தேதி மதுபோதையில் சர்க்கரை நோய்க்கான இன்சுலின் செலுத்தி கொண்டு, மாத்திரை போட்டுக் கொண்டு துாங்கினார்.
காலை வெகுநேரமாகியும் எழுந்திரிக்கவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர், சுரேைஷ, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.