/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
ADDED : ஆக 03, 2025 04:54 AM
கள்ளக்குறிச்சி : மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 43 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்.
அரசு எலும்பு முறிவு டாக்டர் வெங்கடேஷ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி, மனநல டாக்டர் காயத்ரி, கண் டாக்டர் காயத்ரி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 50 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர்.
அதில் தகுதிவாய்ந்த, 43 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.