/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
ADDED : அக் 05, 2025 03:41 AM
கள்ளக்குறிச்சி : மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 137 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர் சிவராமன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் முகமது ராசிக், மனநல டாக்டர் சரவணன், கண் மருத்துவர் கிருத்திகா உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 237 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர்.
அதில் தகுதிவாய்ந்த, 137 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 12 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் இல்லை என சான்றளிக்கப்பட்டது.
37 மாற்றுத்திறனாளிகள் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 51 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வேண்டி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.