sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

/

வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா


ADDED : நவ 25, 2024 11:23 PM

Google News

ADDED : நவ 25, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள மெய்ப்பொருள் நாயனார்க்கு குருபூஜை விழா நடந்தது.

நாயன்மார்கள் 63 பேர்களில், விபூதியையும், சிவனடியாரையுமே சிவனாக கண்டு போற்றியவர் திருநீற்று செல்வர் என்று போற்றப்பட்டு, திருக்கோவிலுாரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவர் மெய்ப்பொருள் நாயனார்.

கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் சித்தி வளாகம் அமைந்துள்ளது. திருக்கோவிலுார் மெய்ப்பொருள் நாயனார் சித்தி வளாக வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 21 வது குருபூஜை விழா நேற்று நடந்தது. செத்தவரை தர்ம பரிபாலன டிரஸ்ட் சுவாமிகள் சிவஜோதி மோன சித்தர் இடப்பக் கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை, மாயம் துறவிய சங்க தலைவர் ஜீவா, எலந்தம்பட்டு அருணாச்சலம், விருத்தாசலம் 63 திருப்பணி மன்ற நிர்வாகி சங்கர், விழுப்புரம் சங்கர்ஜி முன்னிலை வகித்தனர்.

இட்டலிங்க ஆத்ம லிங்க மூர்த்தி களுக்கு, சிவனடியார்கள் அபிஷேக ஆராதனை, மலர் வழிபாடு, ஒலி வழிபாடுகளை செய்கின்றனர். தொடர்ந்து மெய்ப்பொருள் நாயனார் மூலமூர்த்திக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 3:00 மணிக்கு மெய்ப்பொருள் நாயனார் சொற்பொழிவு, ஜீவ சீனிவாசனின் இசை சொற்பொழிவு நடந்தது. ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us