sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

எம்.எல்.ஏ., மகன் வீட்டில் இளம்பெண்ணுக்கு கொடுமை

/

எம்.எல்.ஏ., மகன் வீட்டில் இளம்பெண்ணுக்கு கொடுமை

எம்.எல்.ஏ., மகன் வீட்டில் இளம்பெண்ணுக்கு கொடுமை

எம்.எல்.ஏ., மகன் வீட்டில் இளம்பெண்ணுக்கு கொடுமை


ADDED : ஜன 18, 2024 03:48 AM

Google News

ADDED : ஜன 18, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மகன் வீட்டில் வேலை செய்த பெண்ணை கொடுமைப் படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த திருநறுங்குன்றத்தை சேர்ந்த 18 வயது பெண், சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அப்பார்ட்மென்டில் வசித்து வரும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,வின் மகன் வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்தார்.

அவரை, எம்.எல்.ஏ.,வின் மகன் மற்றும் அவரது மனைவியும் அடித்து துன்புறுத்தி வந்தனர்.

இதனால், வேலை பிடிக்காமல் அந்த பெண் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், அவரை எம்.எல்.ஏ.,வின் மகன் அனுப்பவில்லை.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்த இளம் பெண், தனது தாயிடம் நடந்தவற்றை கூறி தனக்கு ஏற்பட்ட காயங்களை காண்பித்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த இளம் பெண் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் 'ஏ.ஆர்' பதிவின் அடிப்படையில் அந்த பெண்ணிடம் திருநாவலுார் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இச்சம்பவம் தொடர்பாக அந்த பெண் தரப்பில் இதுவரை புகார் அளிக்கவில்லை.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மகன் குடும்பத்தினர் வீட்டு வேலை செய்த பெண்ணை சித்திரவதை செய்த சம்பவம் உளுந்துார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us