sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மீட்புபணியில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

/

மீட்புபணியில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

மீட்புபணியில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

மீட்புபணியில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்


ADDED : டிச 06, 2024 05:53 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கனமழை பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் மதுசூதன் முன்னிலை வகித்தார். வருவாய்த் துறை, நகராட்சி, வேளாண்மை, நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சார வாரியம், பேரூராட்சி உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை, முகாம்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மழைநீர் வடிந்துள்ள பகுதிகள் மற்றும் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளின் விபரம், நிவாரண உதவிகள் வழங்கிய விபரம், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

தொடர்ந்து, நிவாரண உதவி வழங்குவதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் வழங்கும் ஆலோசனைகளை உடனுக்குடன் செயல்படுத்த துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us