ADDED : செப் 15, 2026 07:02 PM
ரிஷிவந்தியம்: வாணாபுரம் தொடக்கப்பள்ளியில் சமையலறையில் புகுந்து உணவு பொருட்களை குரங்கள் சேதப்படுத்தின.
வாணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுகிறது. இதற்காக, அரிசி, ரவை, கோதுமை உட்பட பொருட்கள் சமையலறை கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 3 நாட்கள் விடுமுறைக்குப்பின் நேற்று காலை டிபன் தயார் செய்வதற்காக சமையலறைக் கூடத்தை திறந்து பார்த்தபோது உள்ளே பிளாஸ்டிக் பைகள் கிழிக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.
விடுமுறையின் போது சமையலறை ஜன்னல் வழியாக புகுந்த குரங்குள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சமையலறையை சுத்தம் செய்து, புதிதாக பொருட்கள் வாங்கி மாணவ, மாணவிகளுக்கு டிபன் தயாரிக்கப்பட்டது.
