ADDED : ஏப் 15, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த எரவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் மாலதி, 17; திருக்கோவிலுார் அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தாய் அமுதா அளித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து மாலதியை தேடி வருகின்றனர்.

