ADDED : ஜூலை 10, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வரஞ்சரம் அடுத்த வேளாக்குறிச்சியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் பெரியநாயகி, 22; கடந்த 4ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற பெரியநாயகி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாயமான மகளை கண்டுபிடித்து தர கோரி அவரது தாய் பார்வதி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.