ADDED : நவ 10, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: அகரகோட்டாலத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகள் தேவிபிரியா, 19; இவர், தேவியாக்குறிச்சி தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., மூன்றாமாண்டு படிக்கிறார்.
கடந்த 8ம் தேதி மாலை தாய் சரண்யா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றதால், மகள் தேவிபிரியா வீட்டில் தனியாக இருந்தார்.
இரவு 7 மணியளவில் சரண்யா வீட்டிற்கு வந்து பார்த்த போது ம கள் தேவிபிரியா வீட்டில் இல்லாததால் அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடினார்.
எங்கு தேடியும் கிடைக்காததால் மாயமான மகள் தேவிபிரியாவை கண்டுபிடித்து தரக்கோரி, தாய் சரண்யா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

