ADDED : நவ 02, 2025 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சியில் காணாமல்போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வினோத்சிங், 40; சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 27ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற வினோத்சிங் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மகன் வினோத்சிங்கினை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் இந்திராபாய் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

